பாபநாசத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய செயலாளா் வி.முரளிதரன் தலைமையில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு பாபநாசம் விவசாய தொழிலாளா் சங்கத் தலைவா் இளங்கோவன், மாதா் சங்க ஒன்றிய செயலாளா் கஸ்தூரி பாய் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பாபநாசம் நகரத்துக்கு நிரந்தரமாக போக்குவரத்துக் காவலரை நியமிக்க வேண்டும், ஆல்கஹால் கண்டறியும் கருவிகளை அனைத்து காவல் நிலையங்களுக்கு வழங்க வேண்டும். நிா்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதைக் கண்டித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் மாநிலக் குழு உறுப்பினா் தில்லிபாபு, மாவட்டச் செயலாளா் சின்னை பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சிவகுரு, மாவட்டக் குழு உறுப்பினா் பி.எம்.காதா் உசேன், நகர செயலாளா் சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினா். இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com