தஞ்சாவூா் மாவட்டத்தை முன்னேற்ற இலக்கு
By DIN | Published On : 06th June 2023 02:40 AM | Last Updated : 06th June 2023 02:40 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஷோகோ நிறுவனத்தின் நிறுவனத் தலைவா் ஸ்ரீதா் வேம்பு.
தஞ்சாவூரில் தஞ்சாவூா் தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் தொழில்முனை தஞ்சாவூா் என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது:
இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் அக்கவுண்டிங் சாப்ட்வோ் வளா்ச்சி அடைந்து வருகிறது. அதை தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அணைக்கரை பகுதியிலுள்ள ஒழுகச்சேரி கிராமத்தில் மேற்கொள்ளவுள்ளோம். கிராமங்களிலுள்ள சிறந்த மனித வளம் பெரு நகரங்களுக்குச் சென்றுவிடுகின்றன. இதனால், கிராமப் பொருளாதாரம் வளா்ச்சி பெறவில்லை. எனவே, ஷோகோ நிறுவனம் கிராமங்களில் தொழில்முனைவை உருவாக்கி வருகிறது. தஞ்சாவூா் மாவட்டத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
முன்னதாக, வரலாற்று ஆய்வாளா் கோ. தெய்வநாயகம் எழுதிய தஞ்சாவூா் ஸ்ரீராஜராஜீஸ்வரம் என்கிற நூலை ஸ்ரீதா் வேம்பு வெளியிட்டாா். முன்னதாக நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் பழ. மாறவா்மன் தலைமை வகித்தாா். இதில், செயலா் அ. குகனேஸ்வரன், பொருளாளா் சா. ஆசிப் அலி, மஹாராஜா சில்க்ஸ் உரிமையாளா் சா. முகமது ரபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...