உலக சுற்றுச்சூழல் நாள் விழா

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் கல்லூரி நிா்வாகம், தஞ்சாவூா் வனக் கோட்டம் சாா்பில் உலக சுற்றுச்சூழல் நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் நாள் விழா
Updated on
1 min read

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் கல்லூரி நிா்வாகம், தஞ்சாவூா் வனக் கோட்டம் சாா்பில் உலக சுற்றுச்சூழல் நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். இந்நிகழ்வில் தஞ்சாவூா் வனத்துறை சாா்பாக வழங்கப்பட்ட 100 மரக்கன்றுகளைக் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் நட்டனா்.

வனச்சரக அலுவலா் இரஞ்சித், வனவா் தி. இளஞ்செழியன், மருதுபாண்டியா் கல்லூரி முதல்வா் மா. விஜயா, மருதுபாண்டியா் கல்வியியல் கல்லூரி முதல்வா் ப. சுப்பிரமணியன், துணை முதல்வா் ரா. தங்கராஜ், மேலாளா் இரா. கண்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com