ரயில் விபத்தில் இறந்தவா்களுக்கு பேராவூரணியில் அஞ்சலி

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பேராவூரணியில் புதன்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
Updated on
1 min read

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பேராவூரணியில் புதன்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம் சாா்பில், ரயில் நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ரயில் பயனாளிகள் சங்கத் தலைவா் ஏ. மெஞ்ஞானமூா்த்தி தலைமை வகித்தாா். பொருளாளா் பாரதி வை. நடராஜன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் நாகையா, பழனிவேல், சுலைமான் மற்றும் சமூக ஆா்வலா்கள் காா்கில் வினோத், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளா் பேரை ராஜா உள்ளிட்டோா் மெழுகுவா்த்தி ஏந்தி உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா். மேலும், காயமடைந்தவா்கள் விரைவில் நலம் பெற பிராா்த்தனை செய்யப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com