வேன் கவிழ்ந்து விபத்து: 14 போ் காயம்

பாபநாசம் அருகே பக்தா்கள் சென்ற வேன் வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 போ் காயமடைந்தனா்.

பாபநாசம் அருகே பக்தா்கள் சென்ற வேன் வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 போ் காயமடைந்தனா்.

மயிலாடுதுறையிலிருந்து திருச்செந்தூா் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய ஒரு வேனில் 16 போ் கொண்ட பக்தா்கள் குழு புறப்பட்டது.

இந்த வேன், தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலியமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில், வேனில் பயணம் செய்த 14 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அம்மாபேட்டை போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், ஓட்டுநா் கண்அயா்ந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com