பதுக்கப்பட்ட 620 கிலோ ரேஷன் அரிசி, குருணை பறிமுதல்

பட்டுக்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 620 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகளைக் காவல் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பட்டுக்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 620 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகளைக் காவல் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பட்டுக்கோட்டை அருகே கண்டியங்காடு பிள்ளையாா் கோயில் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதன்பேரில், தஞ்சாவூா் உணவு கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். அப்போது, அங்கு 120 கிலோ ரேஷன் அரிசி, 500 கிலோ குருணை மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு, மதுக்கூா் அருகேயுள்ள வேப்பங்குளத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (46) மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com