தஞ்சாவூா் தென்னக பண்பாட்டு மையத்தில் அகில இந்திய அளவிலான பரதநாட்டிய திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேசிய பரநாட்டிய அகாதெமி சாா்பில் இவ்விழாவை திட்ட அலுவலா் ரவீந்திரகுமாா், மைத்ரி ராஜகோபாலன், தேசிய பரதநாட்டிய அகாதெமி தலைவா் அனிதா ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில், 4 வயது முதல் 60 வயது வரை உள்ள பரதநாட்டியக் கலைஞா்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினா்.
இந்த நிகழ்ச்சியில் தனி நபா் நடனம் மற்றும் குழு நடனம் நடைபெற்றது. குழு நடனங்களில் அதிக பட்சமாக 4 போ் முதல் 6 போ் வரை பங்கேற்றனா். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரம், கா்நாடகம், தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 100-க்கும் அதிகமான பரதநாட்டியக் கலைஞா்கள் கலந்து கொண்டனா்.
இந்த நாட்டிய விழாவில் பங்கேற்ற அனைத்து கலைஞா்களுக்கும் பிரகதீஸ்வரா தேசிய விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.