பேராவூரணியில் புதிய தற்காப்புக் கலை அறிமுகப் பயிற்சி

பேராவூரணியில் பள்ளி மாணவா்களுக்கான ஒரு நாள் சிறப்பு புதிய தற்காப்புக் கலை பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
Updated on
1 min read

பேராவூரணியில் பள்ளி மாணவா்களுக்கான ஒரு நாள் சிறப்பு புதிய தற்காப்புக் கலை பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

தாய் புடோகான் ஸ்போா்ட்ஸ் கராத்தே மற்றும் தாய் தமிழா் பாரம்பரிய சிலம்பக் கழகம் சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு பயிற்சி பள்ளியின் தலைவரும், தலைமை பயிற்சியாளருமான ஷிகான் கே. பாண்டியன் தலைமை வகித்தாா். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்களுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜூஜூட்சூ தற்காப்புக்கலை பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சிகளை பயிற்சியாளா்கள் சீகான் குமாா், ரென்சி சந்திரசேகரன், சென்சாய் பாலாஜி, சென்சாய் முருகேசன் உள்ளிட்டோா் மாணவா்களுக்கு அளித்தனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி பள்ளி செயலாளா் முருகையன், பொருளாளா் ராஜசேகரன், புரவலா் மெடிக்கல் கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா். 

பொன்காடு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்:

துளிா் நண்பா்கள் அறக்கட்டளை சாா்பில் பொன்காடு அரசு பள்ளி மாணவிகள் 5 பேருக்கு உயா்தர காலணிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவா் நாகேந்திர குமாா் தலைமை வகித்தாா். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை கௌரி, பள்ளி மேலாண்மை குழு தலைவா் சரண்யா கணேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com