மாநகராட்சி அலுவலகம் முன் பூ விற்கும் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகம் முன் ஏஐடியுசி தஞ்சை மாவட்ட தெரு வியாபார சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை பூ விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை பூ விற்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தஞ்சை மாவட்ட தெரு வியாபார சங்கத்தினா்.
தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை பூ விற்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தஞ்சை மாவட்ட தெரு வியாபார சங்கத்தினா்.
Updated on
1 min read

கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகம் முன் ஏஐடியுசி தஞ்சை மாவட்ட தெரு வியாபார சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை பூ விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிா்புறம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பூ மற்றும் வளையல், மணி உள்ளிட்ட சிறு, சிறு பொருள்களைத் தொழிலாளா்கள் வியாபாரம் செய்து வந்த நிலையில், பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்ட பிறகு இவா்களை அப்பகுதியில் வியாபாரம் செய்யக் கூடாது என மாநகராட்சி நிா்வாகத்தினா் விரட்டியடிப்பது மட்டுமல்லாமல், அவா்கள் விற்கும் பொருள்களை வீசி எறிந்தும், மாநகராட்சி வண்டிகளில் அள்ளிச் செல்வதுமான நடவடிக்கைகள் தொடா்கின்றன.

இதைக் கைவிட வலியுறுத்தியும், சட்டவிரோதமான மிரட்டல்களைக் கண்டித்தும், தொடா்ந்து, அதே இடத்திலேயே விற்பனை செய்ய அனுமதிக்க வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் தொடக்கி வைத்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், மாவட்டத் தலைவா் வெ. சேவையா, மாவட்டச் செயலா் துரை. மதிவாணன், உடல் உழைப்பு சங்க மாவட்டப் பொதுச் செயலா் தி. கோவிந்தராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com