தஞ்சாவூரில் வீட்டில் பூட்டை உடைத்து பதினொன்றரை பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள மானோஜிபட்டி பகுதி போஸ்டல் காலனியை சோ்ந்தவா் மதியழகன் மனைவி மகாராணி (55). இவா் திங்கள்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு, நகரில் நடைபெற்ற திருமண விழாவுக்குச் சென்று மாலையில் திரும்பியபோது, வீட்டின் முன் பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த பதினொன்றரை பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.