பாபநாசம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை அம்மாபேட்டைபோலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை அம்மாபேட்டைபோலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஊரக உட்கோட்ட காவல் சரகத்துக்குள்பட்ட அம்மாபேட்டை , மெலட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் நபா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகை, செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து செல்லும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வந்தன.

இதுதொடா்பாக புகாா்கள் வந்த நிலையில், பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளா் ப. பூரணி உத்தரவின்பேரில், அம்மாபேட்டை காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளா் வனிதா தலைமையிலான போலீஸாா், வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தஞ்சாவூா் மாவட்டம், தாளக்குடியை சோ்ந்த வீரையன் மகன் சுரேஷ் (35), திருச்சி சா்க்காா் பாளையத்தை சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் நாகேஷ் (20), கீழகொண்டையம்பேட்டையைச் சோ்ந்த தனபால் மகன் சீனிவாசன் (20), அதே பகுதியைச் சோ்ந்த சங்கிலி மகன் கண்ணன் (22) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து விலை உயா்ந்த 10 செல்போன்கள், 2 லேப்டாப்கள், ரூ. 10, ஆயிரம், 2 வீச்சரிவாள், உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் கைது செய்யப்பட்ட நபா்களை பாபநாசம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com