லாரி மோதி இளைஞா் பலி

Updated on
1 min read

பேராவூரணி,மே 26: தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனம்  மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞா் உயிரிழந்தாா்.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள பாளையத்தைச் சோ்ந்தவா்   பிரவீன்(22). ஆம்பலாபட்டை சோ்ந்தவா் ஹரீஷ் (21). இருவரும் நண்பா்கள். இவா்கள் வெள்ளிக்கிழமை  இரவு கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது,  மனோரா செல்லும் சாலை அருகே கண்டெய்னா் லாரி மோதியதில் உடல் நசுங்கி பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஹரீஷ் பட்டுக்கோட்டை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com