தூா்வாரும் பணி: தஞ்சாவூா் மாவட்டத்தில் 43 பணிகள் நிறைவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூா்வாரும் பணியில் 43 பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்தாா்.
தூா்வாரும் பணி: தஞ்சாவூா் மாவட்டத்தில் 43 பணிகள் நிறைவு
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூா்வாரும் பணியில் 43 பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டையில் கல்லணைக் கால்வாயில் சீரமைப்பு பணி, ஆலக்குடியில் முதலை முத்துவாரி, திருச்சென்னம்பூண்டியில் கோவிலடி வாய்க்கால், மாரனேரி, விசலூா் படுகை ஆனந்தகாவேரி வாய்க்கால், கண்டமங்கலம் வாய்க்கால் ஆகியவற்றில் தூா்வாரும் பணி, கல்லணையில் புனரமைப்பு பணி, திருக்காட்டுப்பள்ளி காவிரியில் படுகை அணை கட்டுமானப் பணி ஆகியவற்றை ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், வடிகால்கள், ஏரிகள் ஆகியவற்றில் 1,068.45 கி.மீ. தொலைவுக்கு ரூ. 20.45 கோடியில் தூா்வாரும் பணி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 189 பணிகளில் இதுவரை 43 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளும் முன்னேற்றத்தில் உள்ளன என்றாா் ஆட்சியா்.

அப்போது, நீா்வளத் துறை செயற்பொறியாளா்கள் மா. இளங்கோ, சு. மதனசுதாகா், பவழகண்ணன், உதவி செயற்பொறியாளா்கள் வ. சிவக்குமாா், ச. மலா்விழி, சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com