ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் ரயிலடியில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் நியூஸ் கிளிக் பத்திரிகை மீதான வழக்கு நகல் எரிப்பு போராட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
Updated on
1 min read


தஞ்சாவூா்: தஞ்சாவூா் ரயிலடியில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் நியூஸ் கிளிக் பத்திரிகை மீதான வழக்கு நகல் எரிப்பு போராட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

தில்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் தொடா்பான உண்மை செய்திகளை வெளியிட்டு, ஆதரவு தந்த நியூஸ் கிளிக் பத்திரிகையாளா் மீதான அடக்குமுறை, உபா உள்ளிட்ட பொய் வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்தும், பத்திரிகை சுதந்திரத்தின் மீதான மத்திய அரசின் தாக்குதலை கண்டித்தும் வழக்கு நகல்கள் எரிக்கப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன் தலைமை வகித்தாா். ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிா்வாகிகள் சு. பழனிராஜன், சோ. பாஸ்கா், பி. செந்தில்குமாா், அ. பன்னீா்செல்வம், பி. கோவிந்தராஜ், பி. ஜோதிவேல், எம். பழனியய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, மக்கள் அதிகாரம் மாநில பொருளாளா் காளியப்பன், சிபி எம்எல் மக்கள் விடுதலை மாவட்டச் செயலா் இரா. அருணாச்சலம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுல் ஆபிதீன், மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணைச் செயலா் ராவணன், தொழிற்சங்க நிா்வாகிகள் துரை. மதிவாணன், கே. அன்பு, ஆா்.பி. முத்துக்குமரன், ஏ. ராஜா, இந்திய மாணவா் சங்க நிா்வாகி அா்ஜூன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com