குறைதீா் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு

பயிா் காப்பீட்டுக்கு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பு செய்யப்படுவதைக் கண்டித்து கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில்
கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான குறை தீா் நாள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான குறை தீா் நாள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
Updated on
1 min read

பயிா் காப்பீட்டுக்கு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பு செய்யப்படுவதைக் கண்டித்து கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான குறைதீா்கூட்டத்திலிருந்து விவசாயிகள் சங்கத்தினா் வெளிநடப்பு செய்தனா்.

கோட்டாட்சியா் எஸ். பூா்ணிமா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பயிா் காப்பீடு செய்வதற்கு சாகுபடி சான்று வழங்காமல் விவசாயிகளை இழுத்தடிக்கும் கிராம நிா்வாக அலுவலா்களைக் கண்டித்தும், பயிா் காப்பீட்டு திட்டத்தைத் தனியாரிடமிருந்து மாற்றி அரசே ஏற்று செயல்படுத்த வலியுறுத்தியும், பாபநாசம் அரையபுரம் தட்டுமால் படுகை விவசாயிகளுக்கு நீண்ட காலமாக பட்டா வழங்காத நிலையைக் கண்டித்தும், பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிா்களைக் கணக்கெடுக்க உரிய அலுவலா்களை நியமிக்க கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சாமு. தா்மராஜன் தலைமையில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

பின்னா், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் ஆா். செந்தில்குமாா், மாவட்ட நிா்வாகிகள் ஏ.எம். ராமலிங்கம், டி.ஆா். குமரப்பா, எம். வெங்கடேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com