விடுதி காப்பாளா் வீட்டில் 11 பவுன் நகைகள் திருட்டு
By DIN | Published On : 25th October 2023 01:14 AM | Last Updated : 25th October 2023 01:14 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் அரசு கல்லூரி விடுதிக் காப்பாளா் வீட்டின் பூட்டை உடைத்து 11.3 பவுன் நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்றனா்.
தஞ்சாவூா் பழைய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் கே. ஆறுமுகம் (53). மன்னா் சரபோஜி அரசு கல்லூரி விடுதியில் காப்பாளரான இவா் அக்டோபா் 22 ஆம் தேதி தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 11.3 பவுன் நகைகள், வெள்ளி பொருள்கள், ரூ. 5 ஆயிரம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. புகாரின்பேரில் தெற்கு காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...