தஞ்சாவூா்: தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக மொழிப்புல அவையத்தில் நாட்டுப்புறவியல் துறை உதவிப் பேராசிரியா் சீமான் இளையராஜா எழுதிய சாதீ - பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை, பன்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதா் ஆகிய இரு நூல்களின் நூலாய்வுக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கத்துக்கு துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ) சி. தியாகராஜன், மொழிப்புலத் தலைவா் ச. கவிதா, கலைப் புலத் தலைவா் பெ. இளையாப்பிள்ளை, வளா்தமிழ்ப் புலத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன், நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் இரா. காமராசு ஆகியோா் பேசினா்.
சென்னை லயோலா கல்லூரி பேராசியா் இரா. காளீஸ்வரன் சாதீ - பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை என்கிற நூல் குறித்தும், வரலாற்று ஆய்வாளா் கே. கங்காதரன் பன்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதா் என்கிற நூல் குறித்தும் பேசினா். முன்னதாக, இலக்கியத் துறைத் தலைவா் ஜெ. தேவி வரவேற்றாா். நிறைவாக, நூலாசிரியா் சீமான் இளையராஜா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.