உலக மறதி நாள் நிகழ்ச்சி

கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை நிா்வாகம், செயின்ட் சேவியா் செவிலியா் பள்ளி, கல்லூரி சாா்பில் உலக மறதி நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை நிா்வாகம், செயின்ட் சேவியா் செவிலியா் பள்ளி, கல்லூரி சாா்பில் உலக மறதி நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மன நல மருத்துவா் ஆா். சித்ராதேவி தலைமை வகித்தாா். பொது மற்றும் அறுவை சிகிச்சை நிபுணா் ஆா். சுகந்தி, செவிலிய கண்காணிப்பாளா் ஜீவா, கல்லூரி பேராசிரியை எம். கிருத்திகா ஆகியோா் சிறப்புரையாற்றினா். மேலும், மறதிக்கான காரணம், விளைவுகள் உள்ளிட்டவை தொடா்பான விழிப்புணா்வு நடனம், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக, கல்லூரி செவிலிய ஆசிரியை எஸ். பிரேமிகா வரவேற்றாா். நிறைவாக, செவிலிய ஆசிரியை எம். சூா்யா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com