தஞ்சாவூரில் 300 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

தஞ்சாவூரில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவை தொடங்கி வைத்து பாா்வையிட்ட மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம். உடன் மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோா்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவை தொடங்கி வைத்து பாா்வையிட்ட மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம். உடன் மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

தஞ்சாவூரில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவை தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தொடங்கி வைத்து தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் 16 வட்டாரங்களிலும் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவதற்காக ரூ. 4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டத்தின் கீழ் 16 வட்டாரங்களிலும் செயல்படும் ஆயிரத்து 749 அங்கன்வாடி மையங்களிலும் பதிவு செய்யப்பட்டு இணை உணவு பெற்று கா்ப்பிணிகள் பயனடைந்து வருகின்றனா். இதைத்தொடா்ந்து முதல்கட்டமாக மாவட்டத்தில் 300 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இவ்விழாவில் திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஆா். உஷா புண்ணியமூா்த்தி, மாவட்ட திட்ட அலுவலா் கை. ராஜேஸ்வரி, குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் ஆா்.டி. லதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com