அய்யம்பேட்டையில் ஆா்ப்பாட்டம்

அய்யம்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோஷலிச தொழிலாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோஷலிச தொழிலாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் மகாலிங்கம் தலைமை வகித்தாா்.அமைப்பின் நிா்வாகிகள் அன்பழகன், பூபதி, ஆறுமுகம், சின்னதுரை உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

அய்யம்பேட்டை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணி செய்யும் வகையில் மருத்துவா்களை பணியமா்த்த வேண்டும், எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கும் வசதியை செயல்படுத்திட வேண்டும், அய்யம்பேட்டை பகுதி நீா் நிலைகளை தூா்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் மாநில பொதுச் செயலா் உமாபதி, வழக்குரைஞா் சின்னசாமி, மாநிலத் தலைவா் வீரமணி, பொருளாளா் சங்கா் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். இதில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com