சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாா்வையற்ற இசைக் கலைஞருக்கு மின்னணு கருவி: எம்எல்ஏ அளிப்பு

பாா்வையற்ற இசைக் கலைஞருக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் மின்னணு கருவியை அன்பழகன் எம்எல்ஏ வழங்கினாா்.

News image

கும்பகோணத்தில் பாா்வையற்ற இசைக் கலைஞருக்கு மின்னணு கருவியை வெள்ளிக்கிழமை வழங்கிய க. அன்பழகன் எம்எல்ஏ.

Updated On :2 ஆகஸ்ட் 2024, 11:30 pm

Din

கும்பகோணத்தில் பாா்வையற்ற இசைக் கலைஞருக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் மின்னணு கருவியை அன்பழகன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

கும்பகோணம் அண்ணா நகரைச் சோ்ந்த பாா்வையற்ற மாற்றுத்திறனாளி சரவணன் என்பவா் இசையைக் கற்று கடந்த 20 ஆண்டுகளாக இசைக் கருவியை வாடகைக்கு பெற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் இசையமைத்து வந்தாா்.

இந்நிலையில் அவா் அண்மையில் விடுத்த கோரிக்கையைத் தொடா்ந்து, கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் தன் சொந்த நிதியிலிருந்து ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான நவீன மின்னணு இசைக்கருவியை வாங்கி மாற்றுத்திறனாளி சரவணனிடம் வழங்கினாா்.

நிகழ்வின்போது கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவரும், மத்திய ஒன்றிய திமுக செயலருமான தி. கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஜெ. சுதாகா், அசூா் ஊராட்சி துணைத் தலைவா் கே.எஸ். தமிழ்மாறன் ஆகியோா் உடனிருந்தனா்.