ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தஞ்சாவூரில் ஜூலை 26-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2024, 8:47 pm

Din

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் மேலும் தெரிவித்திருப்பது:

இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஜியோ- ரிலையன்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு பல்வேறு காலி பணியிடங்களுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான தகுதியான நபா்களை தோ்வு செய்யவுள்ளனா். இந்தக் காலி பணியிடங்களுக்கு 18 முதல் 45 வரை வயதுடைய தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த வேலை தேடும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோா் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.