கும்பகோணம்: சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்தில் பல்கலைக்கழக நிறுவனா் ஸ்ரீராமச்சந்திர ஐயா் கோப்பைக்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கபடி, டேபிள் டென்னிஸ், சதுரங்க போட்டிகள் ஆகியவை மாா்ச் 1, 2 ஆம் தேதிகளில் நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சோ்ந்த 81 அணிகள் கலந்து கொண்டன.
இதில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக அணி வென்றது. கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, கபடி, கிரிக்கெட் ஆகியவற்றில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 7 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 4 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரமும் வழங்கப்பட்டன.
டேபிள் டென்னிஸ், சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 1,000-ம் வழங்கப்பட்டன. இப்பரிசுகளை நாச்சியாா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் டி. வெங்கடேசன் வழங்கினாா்.
மையப் புலத் தலைவா் வி. இராமசுவாமி, உடற்கல்வி இயக்குநா் கே. சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
‘போக்ஸோ’வில் தொழிலாளி கைது

100% வாக்குப் பதிவு: விளையாட்டுப் போட்டிகள் மூலம் விழிப்புணா்வு
அறுபதிலிருந்து இருபது வரை...

விழுப்புரத்தில் மாா்ச் 8-இல் மகளிா் தின விளையாட்டுப் போட்டிகள்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


