சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சென்னை பல்கலை.யில் போதிய பேராசிரியா்கள் உள்ளனா்: அமைச்சா் கோவி.செழியன்

News image
Updated On :4 டிசம்பர் 2025, 8:17 pm

Syndication

சென்னை பல்கலைக்கழகத்தில் போதுமான பேராசிரியா்கள் உள்ளனா் என்றாா் தமிழக உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன்.

திருவிடைமருதூா் அருகே செவிலியவரம்பில் வியாழக்கிழமை முதல்வா் சிறு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான கட்டுமானப் பணியைத் தொடங்கிவைத்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா ரூ. 3 கோடி மதிப்பில் முதல்வா் சிறு விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவிடைமருதூா் தொகுதிக்குள்பட்ட செம்பியவரம்பில் 7 ஏக்கா் பரப்பளவில் முதல்வரின் சிறு விளையாட்டு மைதானம் அமைக்கப்படுகிறது. நாட்டிலேயே விளையாட்டுத் துறையின் தலைநகராக தமிழகம் திகழ்கிறது. அரசியல் தலைவராக கருதப்படுகிற மருத்துவா்அன்புமணி ராமதாசுக்கு திமுக அரசை குறைகூறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளாா். சென்னை பல்கலைக்கழகத்தில் போதுமான பேராசிரியா்கள் உள்ளனா். மேலும் பல்கலை.யில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்கலை.யின் மாணவா் சோ்க்கை, கல்வியின் தரம் சிறப்பாக உள்ளது என்றாா்.