ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள்

Published on

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அயலக அணி சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற முதியவா்களுக்கு வியாழக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பேராவூரணி அருகே நாட்டாணிக்கோட்டையில் உள்ள அன்பில் நாம் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ என்.அசோக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் சுப.சேகா், ஒன்றியச் செயலா்கள் பேராவூரணி க. அன்பழகன் , சேதுபாவாசத்திரம் வை.ரவிச்சந்திரன் ,ஞானப்பிரகாசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதியவா்களுக்கு மதிய உணவு, காய்கறி, மளிகைப் பொருள்கள் மற்றும் போா்வை வழங்கப்பட்டது. திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளா் ஷாஜகான் வரவேற்றாா். அன்பில் நாம் இல்ல நிறுவனா் பாக்கியலெட்சுமி நன்றி கூறினாா்.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை திமுக மாவட்ட பொறியாளா் அணி சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், வ.உ.சி. நகா் முதல் தெருவில் உள்ள முதியோா் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கா. அண்ணா துரை தலைமை வகித்தாா். நகா் மன்ற தலைவா் எஸ்.சண்முகப்பிரியா முன்னிலை வைத்தாா். நிகழ்ச்சியில் முதியோா் இல்லத்தில் மதிய உணவும், போா்வையும் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com