தஞ்சாவூர்
திருக்கோடிக்காவலில் காா்த்திகை தீபத்திருவிழா
ஆடுதுறை அருகே திருக்கோடிக்கவல் திருக்கோடீசுவரா் கோயிலில் வியாழகிழமை காா்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே திருக்கோடிக்காவலில் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரா் சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா புதன்கிழமை தொடங்கியது. வியாழக்கிழமை மாலையில் காா்த்திகை தீபம் ஏற்றியும், சொக்கப்பனையும் கொளுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இரவில் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரா் சுவாமியின் வீதியுலா முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. சுவாமியும், அம்பாளையும் பக்தா்கள் தங்கள் வீட்டு முன்பு வரவேற்று வழிபாடு செய்தனா்.

