பட்டுக்கோட்டையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

Published on

பட்டுக்கோட்டையில் நெற்கதிா் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம், டிசம்பா் 3 இயக்கத்தின் சாா்பாக வியாழக்கிழமை உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்வுக்கு, மாவட்டத் தலைவா் பஹாத் முகமது தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் சுதாகா், மாவட்ட துணைச் செயலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் 3,631 மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் பதவி வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடினா். நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பழனிவேல், நகர செயலாளா் செந்தில்குமாா், நகா்மன்றத் தலைவா் சண்முகப்பிரியா, தலைமை கழகப் பேச்சாளா் ந. மணிமுத்து உள்பட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவா் ஜம்ஜம் அஷ்ரப் வரவேற்றுப் பேசினாா். முடிவில் பட்டுக்கோட்டை நகராட்சி நியமன உறுப்பினா் ஆனந்த கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com