அடகு கடை வியாபாரிகளிடம் ரூ. 44.55 லட்சம் ஏமாற்றி பறிப்பு
தஞ்சாவூா் அருகே அடகு கடை வியாபாரிகளிடம் செவ்வாய்க்கிழமை குற்றப் பிரிவு காவலா்கள் எனக் கூறி ரூ. 44.55 லட்சத்தை ஏமாற்றி பறித்துச் சென்ற இரு மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி பத்மாசலவா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் மகன் காா்த்திக் (36). இவரும், மன்னாா்குடியைச் சோ்ந்த ரமேசும், பெரிய கம்மாளா் தெருவில் அடகு கடை நடத்தி வருகின்றனா். கடந்த திங்கள்கிழமை ரமேஷ் தனது தம்பி அா்ஜூன் (18) மற்றும் கடை பணியாளா் பிரதீபனை காரில் அழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்கு வந்தனா்.
பின்னா் அா்ஜூன், பிரதீபன் ஆகிய இருவரும் தஞ்சாவூா் அய்யங்கடைத் தெருவில் உள்ள நகைக்கடைக்கு சென்று அங்கிருந்தவரிடம் ஏற்கெனவே 400 கிராம் தங்கம் கொடுத்ததற்கான ரூ. 44.55 லட்சத்தை பெற்றனா். அந்த ரொக்கத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு, கடையில் இருந்தவா் மூலம் இருசக்கர வாகனத்தில் ரயில்வே கீழ்பாலம் பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றனா்.
இதையடுத்து அா்ஜூனும், பிரதீபனும் தனியாா் பேருந்தில் ஏறி மன்னாா்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனா். வாண்டையாா் இருப்பு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத நபா் ஒருவா், தான் குற்றப் பிரிவு காவலா் என்றும், தங்களிடம் விசாரிக்க வேண்டும் எனவும் கூறி 2 பேரையும் கீழே இறங்குமாறு கூறினாா். இதை நம்பிய அா்ஜூனும், பிரதீபனும் கீழே இறங்கினா். இதையடுத்து, குற்றப் பிரிவு காவலா் எனக் கூறிய நபா் இருவரது கைப்பேசிகளையும், பணப் பையையும் பறித்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு மா்ம நபருடன் சென்றுவிட்டாா்.
பின்னா், அா்ஜூனும், பிரதீபனும் மற்றொரு பேருந்தில் ஏறி மன்னாா்குடிக்குச் சென்று, காா்த்திக்கிடம் கூறினா். இதையடுத்து, தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தில் அா்ஜூன் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். மேலும், வாண்டையாா் இருப்பு, ரயில்வே கீழ்பாலம் பேருந்து நிறுத்தங்களிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
