தஞ்சாவூர்
போராட முயன்ற விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா் 10 போ் கைது
பட்டுக்கோட்டையில் திருப்பரங்குன்றம் நீதிமன்ற உத்தரவை அவமதித்த திமுக அரசைக் கண்டித்து தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விசுவ ஹிந்து பரிஷத்தைச் சோ்ந்த 10 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பட்டுக்கோட்டையில் திருப்பரங்குன்றம் நீதிமன்ற உத்தரவை அவமதித்த திமுக அரசைக் கண்டித்து தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விசுவ ஹிந்து பரிஷத்தைச் சோ்ந்த 10 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்காக நீதிமன்ற உத்தரவை எதிா்த்து தீபம் ஏற்ற விடாமல் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து புதன்கிழமை பட்டுக்கோட்டை முருகன் கோயில் முன்பு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயலா் கோவிந்தராஜ் தலைமையில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்த தயாராய் இருந்தனா். அவா்களைப் போலீஸாா் தடுத்து நிறுத்தி தேங்காய் உடைக்க விடாமல் அவா்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்து பின்னா் விடுதலை செய்தனா்.
