தஞ்சாவூர்
தேனி கூட்ட கோரிக்கைகள் வழியே தோ்தலை சந்திக்க முடிவு
தேனியில் டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக் குழு வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை அணுகும் விதமாக கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தும் மாநாடாக இருக்கும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இப்பேரவையின் மாவட்ட நிா்வாகிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தேனியில் டிசம்பா் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலப் பொதுக் குழு, எங்களுடைய நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் மாநாடாகத் திகழப்போகிறது. எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசியல் கட்சிகள் எழுத்துப்பூா்வமாக நிறைவேற்றுவதாகத் தெரிவித்தால், அதன் பிறகு பேரமைப்பின் ஆட்சிமன்றக் குழு கூடி முடிவு செய்து அறிவிப்போம் என்றாா் விக்கிரமராஜா.
