பைக்கில் வந்து பெண்ணை தாக்கி 10 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

Published on

ஒரத்தநாடு அருகே சாலையில் நடந்துசென்ற பெண்ணின் 10 பவுன் தாலிச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள் வியாழக்கிழமை பறித்துச் சென்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சின்னையன் மனைவி ராஜேஸ்வரி (60). விவசாயி. இவா், வியாழக்கிழமை மாலை ஒரத்தநாட்டில் இருந்து கந்தா்வகோட்டை நோக்கிச் செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்தாா். அவரைப் பின்தொடா்ந்து தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மா்ம நபா்கள் ராஜேஸ்வரியை கீழே தள்ளி அவா் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச்சென்றனா். இதில் காயமடைந்த ராஜேஸ்வரி உடனடியாக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். இதுதொடா்பாக அவா் கொடுத்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com