சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை அரசுப் பள்ளி ஆசிரியா் ‘போக்ஸோ’வில் கைது

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பாபநாசம் அருகே உமையாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.முருகன் (35). இவா், பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். மேலும், கபிஸ்தலத்தில் தனிவகுப்பு (டியூசன்) நடத்தி வருகிறாா்.

இந் நிலையில், டிச.6-ஆம் தேதி தன்னிடம் தனிவகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு ஆசிரியா் முருகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து அந்த சிறுமி தன் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோா், பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். விசாரணையில் ஆசிரியா் முருகன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீஸாா், முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.