தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தஞ்சை, கும்பகோணத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து போராட்டம்!

இ-பைலிங் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தும் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்துவது பற்றி..

News image

பணியை புறக்கணித்து வழக்குரைஞர்கள் போராட்டம்

Updated On :15 டிசம்பர் 2025, 7:31 am

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தைப் புறக்கணித்து இ-பைலிங் நகலை எரித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உயர் நீதிமன்ற சுற்றறிக்கையின் படி,

இ-பைலிங் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல், குறைபாடுகளால் வழக்குரைஞர்கள், வழக்காடிகள் வெகுவாகப் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, இ-பைலிங் முறையிலுள்ள குறைபாடுகளைச் சரி செய்யும் வரை கட்டாய இ-பைலிங் முறையைத் திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டிக்க வேண்டும். வழக்குரைஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதேபோல் இந்தக் கோரிக்கை வலியுறுத்தி தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் மற்றும் கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து, மத்திய அரசு கொண்டு வந்த இ-பைலிங் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Summary

In Thanjavur and Kumbakonam, lawyers' associations are boycotting the courts and staging protests by burning copies of e-filings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.