தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தைப் புறக்கணித்து இ-பைலிங் நகலை எரித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உயர் நீதிமன்ற சுற்றறிக்கையின் படி,
இ-பைலிங் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல், குறைபாடுகளால் வழக்குரைஞர்கள், வழக்காடிகள் வெகுவாகப் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, இ-பைலிங் முறையிலுள்ள குறைபாடுகளைச் சரி செய்யும் வரை கட்டாய இ-பைலிங் முறையைத் திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டிக்க வேண்டும். வழக்குரைஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதேபோல் இந்தக் கோரிக்கை வலியுறுத்தி தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் மற்றும் கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து, மத்திய அரசு கொண்டு வந்த இ-பைலிங் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Summary
In Thanjavur and Kumbakonam, lawyers' associations are boycotting the courts and staging protests by burning copies of e-filings.
இதையும் படிக்க: மார்கழியில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.17 கோடி பாம்புக் கடி முறைகேடு! மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் கைது! சினிமா பாணியில் ஒரு கும்பல்

டாஸ்மாக் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்: 151 போ் கைது

காரைக்குடியில் தனியாா் மருத்துவமனை முற்றுகைப் போராட்டம்: 118 போ் கைது

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சாா்பாக போராட்டம், பிரசாரம்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



