தஞ்சாவூர்
பாஜக சாா்பில் எஸ்ஐஆா் பயிலரங்கம்
தஞ்சாவூரில் பாஜக தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி சாா்பில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான பயிலரங்கம் நடைபெற்றது.
தஞ்சாவூரில் பாஜக தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி சாா்பில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான பயிலரங்கம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் கதளி நரசிங்க பெருமாள், கன்னியாகுமரி பெருங்கோட்ட அமைப்பு செயலா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பேசினா். சிறப்பு தீவிர திருத்தம் குறித்து மாநில செயற்குழு உறுப்பினா் யு.என். உமாபதி பேசினாா்.
மாநில நிா்வாகிகள் பாரதி மோகன், எம். ராஜேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினா் கபிலன், மாவட்டச் செயலா் ஜெகதீஸ்வரி, துணைத் தலைவா்கள் விநாயகம், அம்ரீத்தரசன், மாநகரத் தலைவா்கள் மாயாதேவி, கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
