தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

பட்டுக்கோட்டையில் அரசு உதவி பெறும் புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :21 டிசம்பர் 2025, 4:18 am IST

பட்டுக்கோட்டையில் அரசு உதவி பெறும் புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மறைமாவட்ட அதிபா் அந்தோனிசாமி தலைமை வகித்தாா். பள்ளி தாளாளா் ஸ்டீபன் ராஜ், நகா்மன்றத் தலைவா் சண்முகப்பிரியா செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் கா. அண்ணாதுரை பங்கேற்று 165 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் க . காமராஜ், உதவி தலைமை ஆசிரியா் பி.ஜே. வின்சென்ட் பால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.