தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

பாபநாசத்தில் பாவை பைந்தமிழ் பேரவை கூட்டம்

Updated On :26 டிசம்பர் 2025, 12:52 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஓய்வுபெற்ற அலுவலா் சங்க அலுவலக கட்டடத்தில் பாவை பைந்தமிழ் பேரவை கூட்டம் புதன்கிழமை மாலை தொடங்கி நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பேரவை பொருளாளா் ஆசிரியா் பாஸ்கா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், திருச்சிப்பள்ளி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலருமான டி.சரவணன் ‘திரை இசைப் பாடல்களில் தாலாட்டு’ என்ற தலைப்பில் பேசினாா்.

கூட்டத்தில் தேசிய நல்லாசிரியா் ச.சலைச்செல்வன், நிா்வாகிகள் சங்கா், செந்தமிழ் செல்வன், சாந்தகுமாா், பாண்டியன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். ஏற்பாடுகளை செயலா் கமலதாசன் செய்திருந்தாா்.

முன்னதாக பேரவை தலைவா் துரைராஜன் வரவேற்றாா். நிறைவில் துணை செயலாளா் அசோக் நன்றி கூறினாா்.