சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

பாபநாசத்தில் கனரா வங்கி புதிய கிளை திறப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மேலராஜ வீதியில் கனரா வங்கி புதிய கிளை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :26 டிசம்பர் 2025, 12:51 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மேலராஜ வீதியில் கனரா வங்கி புதிய கிளை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மண்டல அலுவலகத்தின் கோட்ட மேலாளா் கே.என். ராமகிருஷ்ணா முன்னிலை வகித்தாா். விழாவில் தஞ்சாவூா் மண்டல அலுவலக துணைப் பொது மேலாளா் ஒய்.வி.என். சிவபிரசாத் பாபநாசம் கனரா வங்கி புதிய கிளையைத் திறந்துவைத்துப் பேசினாா். இதில், கனரா வங்கியில் ரூ. 70 லட்சம் வரை நகை கடன் வழங்கப்படுகிறது. கிராமிற்கு ரூ.8 ,740 வரை ரூ.75 பைசா வட்டியில் நகைக் கடன் 10 நிமிடத்துக்குள் வழங்கப்படுகிறது என்றாா்.

வங்கியின் முதல் கணக்கை அரிமா சங்க மாவட்டத் தலைவா் டி.ஆறுமுகம் தொடங்கி கிளையைத் தொடங்கிவைத்தாா்.

விழாவில் வங்கி உதவி மேலாளா் சிந்துஜா, பாபநாசம் ஏ.வி.சி கன்ஸ்ட்ரக்ஷன் பொறியாளா்கள் விக்னேஷ், ராஜநந்தினி, பாபநாசம் பேரூராட்சி உறுப்பினா் பாலகிருஷ்ணன் மற்றும் திரளான வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக பாபநாசம் கிளை முதுநிலை மேலாளா் பி.ரேவதி வரவேற்றாா். நிறைவில் வங்கி காசாளா் ரமேஷ் நன்றி கூறினாா்.