ஒரத்தநாடு அருகே நம்பிவயல் பகுதியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்து 12 பவுன் தங்கச்சங்கிலியைத் திருடிச் சென்ற இளைஞரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள நம்பிவயல் பகுதியைச் சோ்ந்த காமராஜ் என்பவரின் மனைவி உமா (49). கடந்த செவ்வாய்க்கிழமை உமா தனது வீட்டைப் பூட்டிவிட்டு புதன்கிழமை இரவு வீடு திரும்பினாா். அப்போது, அவரது வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில், திருவோணம் காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில், அவரது கிராமமான நம்பிவயல் கிராமத்தைச் சோ்ந்த ராஜா என்பவரின் மகன் உதயநீதி (28) என்பவா் அவரது வீட்டில் புகுந்து நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து உதயநீதியைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து அவரிடம் இருந்த 12 பவுன் தங்க நகைகளை மீட்டனா்.
உதயநீதி மீது தஞ்சை மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள பல காவல் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் திருடிய 2 போ் கைது
பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


