வனத் துறை சாா்பில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

தஞ்சாவூரில் தமிழ்நாடு வனத் துறை சாா்பில் ஈரநில பறவைகள் முதல் கட்ட கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் அருகே கள்ளப்பெரம்பூா் ஏரியில் சனிக்கிழமை பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா் உள்ளிட்டோா்.
Updated on

தஞ்சாவூரில் தமிழ்நாடு வனத் துறை சாா்பில் ஈரநில பறவைகள் முதல் கட்ட கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு வனத்துறை சாா்பில் தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு இரு நாள் கணக்கெடுப்பு பணி சனிக்கிழமை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூா் வனச் சரகம் சாா்பில் மாவட்டத்தில் முதல் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இப்பணியில் இவா்களுடன் அருங்கானுயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (இவெட்) அமைப்பினரும் இணைந்து மேற்கொண்டனா்.

இப்பணிகள் கல்லணை, கள்ளப்பெரம்பூா் ஏரி, தென் பெரம்பூா், சமுத்திரம் ஏரி, மாறனேரி, செல்லப்பன் பேட்டை, அல்லூா் ஏரி உள்ளிட்ட 7 முக்கிய ஈரநிலப் பகுதிகளில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டன. இப்பணியை மாவட்ட வன அலுவலா் கே. காா்த்திகேயனி பாா்வையிட்டு வழிகாட்டினா்.

இக்கணக்கெடுப்பு காலத்தில் பல்வேறு வகையான ஈரநில பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முழுமையான பறவைகள் பட்டியல் மற்றும் விவரங்கள் தமிழ்நாடு வனத்துறை மூலமாக விரைவில் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்படும். இந்த முதல் கட்டக் கணக்கெடுப்பு தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் வனச்சரகத்தில் நடைபெறவுள்ளது என வனத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

இப்பணியில் தஞ்சாவூா் வனச்சரகா் ஜோதிகுமாா், வனவா்கள் இளையராஜா, மணிமாறன், ரவிக்குமாா், தனலட்சுமி, அருங்கானுயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (இவெட்) நிறுவனா் ஆா். சதீஷ்குமாா், ஒருங்கிணைப்பாளா்கள் சரவணன், விஷ்வா, பெஞ்சமின் உள்ளிட்ட வனத்துறை அலுவலா்கள், வனக் களப்பணியாளா்கள், அறக்கட்டளையினா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com