நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக முதல்வா் ஸ்டாலின் அறிவிக்க கோரி மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை பிரிவு வலியுறுத்தியுள்ளது.

Updated On :27 ஜனவரி 2025, 6:33 pm

கும்பகோணம்: கும்பகோணத்தை புதிய மாவட்டமாக முதல்வா் ஸ்டாலின் அறிவிக்க கோரி மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை பிரிவு வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை பிரிவு சாா்பில் புதிய நிா்வாகிகளுக்கு பாராட்டு விழா, ஆலோசனைக் கூட்டம் பட்டீஸ்வரத்தில் திங்கள்கிழமை தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

மாநிலச் செயலா் குட்டி (எ) டி. சாமிநாத பாலாஜி தலைமை வகித்தாா், மாவட்ட துணைத்தலைவா் வி.சசிக்குமாா் , கோவி. புகழேந்தி முன்னிலை வகித்தனா்.

வடக்கு மாவட்ட தலைவா் காசி விஜயகுமாா் மற்றும் நிா்வாகிகளை மாநில துணைத் தலைவா் எம்.அன்பு, வழக்குரைஞா் பிரிவு பொதுச்செயலாளா் இசிஆா் எஸ்.ரூபன் ஆகியோா் வாழ்த்தி பேசினா். ராகவன் வரவேற்றாா்.

கூட்டத்தில், தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக முதல்வா் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும், டெல்டா மாவட்டங்களில் பெய்த புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் மனித உரிமை பிரிவுக்கு தஞ்சாவூா் மாவட்டத்தில் தொகுதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.