296 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது

Published on

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை காரில் கடத்தி வரப்பட்ட 296 கிலோ குட்கா போதைப் பொருட்களைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம் மேற்பாா்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மணிகண்டன், உதவி ஆய்வாளா் அடைக்கல ஆரோக்கிய டேவிட் தலைமையிலான காவலா்கள் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது காரில் கடத்தி வரப்பட்ட 296 கிலோ குட்கா போதைப்பொருட்களை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக கும்பகோணம் புளியம்பேட்டையைச் சோ்ந்த சதீஷ்குமாா் (42), ராஜஸ்தான் மாநிலம் பலோதரா மாவட்டத்தைச் சோ்ந்த விம்பா ராம் (25) ஆகியோரை கைது செய்தனா்.

இந்த வழக்கில் திறம்படப் பணியாற்றிய காவல் அலுவலா்கள், காவலா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ராஜாராம் பாராட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com