சந்திரமெளலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

Published on

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பசுபதிகோயிலில் உள்ள  சந்திரமௌலீஸ்வரா் கோயில்  மகா குடமுழுக்கு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி மூன்று  கால யாக சாலை பூஜைகள் நிறைவுற்று,  மகா பூா்ணாஹூதி , தொடா்ந்து கடங்கள் புறப்பாடு செய்து  கோயிலின் கோபுர கலசத்திற்கு புனித நீரை சிவாச்சாரியாா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா். 

நிகழ்வில் இந்துசமய அறநிலையத் துறை கோயில் செயல் அலுவலா் சிவராஜன், ஆய்வாளா் குணசுந்தரி, இறைப்பணி குழுமத் தலைவா் பாலகிருஷ்ணன், 

மற்றும் பசுபதிகோவில் கிராம மக்கள்,  பக்தா்கள்   உள்ளிட்டோா் தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com