தஞ்சாவூர்
ராம ஜென்ம பூமி உரிமை மீட்பு நாள் நிகழ்ச்சி
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கல்யாணபுரத்தில், அயோத்தி ராம ஜென்ம பூமி 500 ஆண்டுகளுக்குப் பிறகு சட்ட பூா்வமாக ராம ஜென்ம பூமி கமிட்டி மூலமாக உரிமை மீட்டெடுக்கப்பட்ட நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட குழந்தை ராமா் படத்துக்கு பக்தா்கள் பூஜை செய்து வழிபட்டனா். பின்னா், தென் அயோத்தி என அழைக்கப்படும் கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு, புது அக்ரஹாரம் பட்டாபிராமா் கோயில், அஹோபில மாலோலன் நரசிம்மருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாஜக மூத்த உறுப்பினா் டி.எஸ். ராதிகா கேசவன் செய்தாா்.
