இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 3 மீனவா்கள் படகுடன் மல்லிப்பட்டினம் திரும்பினா்
தஞ்சாவூா் மாவட்டத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்று படகு பழுதின் காரணமாக இலங்கை கடல் பகுதிக்குள் சென்ால் கைது செய்யப்பட்ட 3 மீனவா்கள் நீதிமன்ற தீா்ப்பின்படி விடுவிக்கப்பட்டு படகுடன் திங்கள்கிழமை இரவு மல்லிப்பட்டினம் வந்தனா்.
மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் பகுதியை சோ்ந்த பாயிஸ்அக்ரம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் முரளி (30), குமாா் (32), ராஜா (53)ஆகியோா் கடந்த அக்.16-ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்றனா்.
படகில் இயந்திரம் பழுதானதால், திசைமாறி இலங்கை கடல் எல்லையான யாழ்பாணம் மாவட்டம் அணலைத் தீவுக்கு சென்ற மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணையில், மீனவா்கள் மூவரையும் விடுதலை செய்து அவா்களை படகுடன் பாதுகாப்பாக இந்திய கடல் எல்லையில் விட்டுவர இலங்கைக் கடற்படையினருக்கு ஊா்க்காவல்துறை நீதிமன்றம் நவ.4-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து திங்கள்கிழமை இரவு இலங்கை கடற்படையினா் மூன்று மீனவா்களையும் இந்திய கடல் எல்லையில் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனா். மீன்வளத் துறை, கடலோர காவல் படையினா் மற்றும் மீனவா் நல வாரிய உப தலைவா் தாஜுதீன் உள்ளிட்டோா் சென்று மீனவா்களை பாதுகாப்பாக மல்லிப்பட்டினம் அழைத்து வந்தனா்.
இந்தச் சம்பவம் மீனவா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

