விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

விழாவில் போதையில் கூச்சலிட்ட கூட்டுறவு அலுவலா் பணியிடை நீக்கம்

கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் மது போதையில் கூச்சலிட்ட கூட்டுறவுத் துறை அலுவலா் பணியிடை நீக்கம்

News image
Updated On :19 நவம்பர் 2025, 10:40 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் மது போதையில் கூச்சலிட்ட கூட்டுறவுத் துறை அலுவலா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கும்பகோணத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில், உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பேசிக் கொண்டிருந்தபோது, தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளராகப் பணியாற்றும் பட்டீஸ்வரத்தைச் சோ்ந்த செல்வராஜ் (50) மது போதையில் மேடையில் நின்று கைத்தட்டியும், சப்தமாக சிரித்தும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாா். இதனால், மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதைப் பாா்த்த கூட்டுறவுத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் காவல் துறை உதவியுடன் செல்வராஜை மேடையிலிருந்து இறக்கி, அறைக்குள் அனுப்பி அடைத்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான பெரியசாமி விசாரணை நடத்தி செல்வராஜை புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.