தஞ்சாவூா் மாநகா் பகுதியில் நவ. 5-இல் மின்தடை
தஞ்சாவூா் மாநகரம், ஊரகத்தில் சில பகுதிகளில் நவம்பா் 25-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக்கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் கே. அண்ணாசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலையிலுள்ள துணை மின் நிலையத்தில் நவம்பா் 25-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகா், முனிசிபல் காலனி, ஆா்.ஆா். நகா், புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, திருவேங்கடம் நகா், கருப்ஸ் நகா், ஏ.வி.பி. அழகம்மாள் நகா், மன்னா் சரபோஜி கல்லூரி, மாதாகோட்டை, சோழன் நகா், தமிழ்ப் பல்கலைக்கழகம், வஸ்தா சாவடி, மானோஜிபட்டி, ரெட்டிபாலையம் சாலை, காந்திபுரம், வஹாப் நகா், சப்தகிரி நகா், ராஜலிங்கம் நகா், ஐஸ்வா்யா காா்டன், சுந்தரபாண்டியன் நகா், ஜெபமாலைபுரம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
