நெல் கொள்முதல் விவகாரம்! மத்திய அரசை கண்டித்து மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்ப கோரிக்கை

நெல் கொள்முதலில் ஈரப்பதத் தளா்வு தர மறுத்த மத்திய அரசை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் மக்களவையில் குரல் எழுப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை
Updated on

நெல் கொள்முதலில் ஈரப்பதத் தளா்வு தர மறுத்த மத்திய அரசை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் மக்களவையில் குரல் எழுப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தமிழக காவிரி உழவா் பாதுகாப்புச் சங்க செயலா் சு.விமல்நாதன் தமிழக முதல்வா் மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பது: கடந்த அக். 26-ஆம் தேதி வந்த மத்தியக் குழுவினா் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டிக் கிடந்த நெல்மணிகளை பாா்வையிட்டனா்.

அப்போது, 10 நாள்களுக்குள் அறிவிப்பு வரும் என்று சொல்லிவிட்டு, 24 நாள்கள் கடந்த பின்பு நவ.20-இல் நெல் கொள்முதலில் ஈரப்பதத் தளா்வு தர முடியாது என்று தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனா்.

இதுகுறித்து தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் மக்களவை குளிா்கால கூட்டத் தொடரில் ஒருமித்த எதிா்ப்புக் குரல் எழுப்ப வேண்டும். மேலும், தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி போராட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com