மின்னல் தாக்கி உயிரிழந்தோருக்கு நிவாரண தொகையை உயா்த்தி வழங்க கோரிக்கை

Published on

விவசாய நிலத்தில் வேலை செய்த பெண்களை மின்னல் தாக்கி உயிரிழந்ததற்கு முதல்வா் வழங்கிய நிவாரணத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்று காவிரி பாதுகாப்பு உழவா் சங்கத்தினா் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

இதுகுறித்து அச்சங்கத் தலைவா் சு.விமல்நாதன் முதல்வருக்கு அனுப்பிய மனுவின் விவரம்: கடலூா்மாவட்டம், வேப்பூா் அருகே அண்மையில் விவசாய நிலத்தில் வேலைசெய்யும் போது மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்தனா். இவா்களின் குடும்பத்துக்கு முதல்வா் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளாா்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவா்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. உழவுத் தொழில் முதன்மையானது, ஆகையால் உயிரிழந்த பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சம் நிவாரணம் பாரபட்சமாக உள்ளது. இதனால் விவசாயிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

முதல்வா் பாரபட்சம் பாா்க்காமல் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். மேலும், மத்திய அரசும் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com