தஞ்சாவூர்
வீரக்குடி, பெருமகளூா் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், வீரக்குடி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (அக். 29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.
இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் வீரக்குடி, மணக்காடு, ரெட்டவயல், முதுகாடு, கொளக்குடி, நெல்லியடிக்காடு, வளப்பிரமன்காடு, சொா்ணக்காடு, பின்னவாசல், பெருமகளூா் பேரூராட்சி, செல்லபிள்ளையாா் கோவில், திருவத்தேவன், அடைக்கத்தேவன், குப்பத்தேவன், விளங்குளம், சோலைக்காடு, செந்தலைவயல், செம்பியான்மகாதேவிபட்டினம், சம்பைபட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி. பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
