சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வருக்கு ஆயுள் தண்டனை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.
Published on

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

திருவாரூா் மாவட்டம், குழுட்டி திடல் பகுதியைச் சோ்ந்தவா் அய்யாதுரை (40). இவா் தற்போது பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூா் வடுகன் குத்தகை ராமாம்பாள்புரம் வாய்க்கால் ஆற்றங்கரை பகுதியில் வசிக்கிறாா்.

சில ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உறவினா் பெண்ணான 10 ஆம் வகுப்பு படித்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாா். இதனால், கா்ப்பமான சிறுமிக்கு 2023, மாா்ச் 4 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து அய்யாதுரையைக் கைது செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் போக்சோ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ. தமிழரசி அய்யாதுரைக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com